கோப்பு படம்.
ஐ.டி.பெண் என்ஜினீயரிடம் 50 பவுன் நகை கேட்டு வரதட்சணை கொடுமை
- மாமனார் -மாமியார் மீது வழக்கு
- பெற்றோர் வீட்டுக்கு சென்று கூடுதலாக 50 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் வாங்கி வரும்படி கூறியதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் அனு(வயது31). பி.டெக் படித்து முடித்த இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முத்தியா ல்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது அனுவுக்கு அவரது பெற்றோர் 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்க ள் வரதட்சணை யாக கொடுத்தனர். திருமணம் முடிந்த சில நாட்களில் அனுவிடம் அவரது கணவர் வினோத்குமார் தேனிலவுக்கு செல்ல பெற்றோ ரிடம் பணம் வாங்கி வருமாறு வலியுறுத்தி னார்.
ஆனால் அனு தான் வேலை பார்த்த பணத்தில் வங்கியில் இருந்து ரூ.60 ஆயிரத்தை எடுத்து கொடுத்தார். அதன் பிறகு 2 மாதத்தில் வினோத்குமார் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். அனு தினமும் வீட்டு வேலை செய்து விட்டு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் வினோத்குமார் வெளி நாட்டுக்கு சென்ற சில நாட்களில் திருமண த்துக்கு வாங்கிய கடன் உள்ளதாக கூறி அனுவிடம் அவரது மாமனார் விநாயகம், மாமனார் புனிதவதி ஆகியோர் 7 பவுன் நகையை வாங்கி வங்கியில் அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டனர்.
பின்னர் தினமும் அனுவிடம் பெற்றோர் வீட்டுக்கு சென்று கூடுதலாக 50 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் வாங்கி வரும்படி கூறியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அனு கணவரிடம் போனில் தெரிவித்த போது அவர் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்து வந்ததால் அனு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு வந்தும் அனுவை தாலி செயினை கழற்றி தரும்படி மாமனார்-மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனு மாமனார் விநாயகம், மாமியார் புனிதவதி, மைத்துனர் பிரகாஷ், நாத்தனார் சுபத்திரை, அத்தை சூர்யா, மாமா அடலரசு மற்றும் உறவினர் சக்திவேல் ஆகியோர் மீது புதுவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.