புதுச்சேரி

கோப்பு படம்.

பெண் போலீஸ் வீட்டில் 14 பவுன்நகை திருட்டு

Published On 2023-04-19 14:57 IST   |   Update On 2023-04-19 14:57:00 IST
  • தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் வெனிசா.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடி நவசக்தி நகரில் வசிப்பவர் ராஜ்மோகன்.

இவரின் மனைவி தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வெனிசா (வயது 54). தென்னாப்பிரிக்கா காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று புதுவையில் வசித்து வருகிறார். தனது வீட்டு அலமாரியில் வைத்திருந்த நகையை சரிபார்த்தார்.

அப்போது 1 பவுன் செயின் , 7 பவுன் தாலி செயின் உள்பட பவுன் நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். வீட்டில் வேலை செய்து வந்த சரஸ்வதி மீது சந்தேகப்படுவதாக குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News