புதுச்சேரி

கோப்பு படம்.

காசு வைத்து சூதாடிய 10 பேர் கைது

Published On 2022-10-22 13:30 IST   |   Update On 2022-10-22 13:30:00 IST
  • புதுவை வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஒரு கும்பல் அதிகளவில் பணம் வைத்து சூதாடுவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
  • இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

புதுச்சேரி:

காசு வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.34 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

புதுவை வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஒரு கும்பல் அதிகளவில் பணம் வைத்து சூதாடுவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் வைத்திகுப்பம், குருசுக்குப்பம், சோலைநகர், அங்காளம்மன் நகர் மற்றும் நடுகுப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்ற பிரகாஷ் (வயது38),ராஜா(40), மகேஷ்(61), செல்லப்பன்(46), சதீஷ்(24), வல்லத்தான்(31), செழியன்(30), ஆனந்த்(35), சங்கர்(40) மற்றொரு வல்லத்தான்(32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் சூதாட்ட பணம் ரூ.34 ஆயிரத்து 180 மற்றும் 7 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News