புதுச்சேரி

சுல்தான்பேட்டையில் பள்ளிவாசல் புனரமைப்புக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ரூ.10 லட்சம் நிதி வழங்கிய காட்சி.

பள்ளிவாசல் புனரமைப்புக்கு ரூ.10 லட்சம் நிதி- முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

Published On 2023-04-07 14:38 IST   |   Update On 2023-04-07 14:38:00 IST
  • மதரசா கல்வி நிறுவன புனரமைப்புப் பணிக்கு வஃபு வாரியம் மூலம் ரூ. 10 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது
  • தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் சுல்தான்பேட்டை வக்பு முஹமதியா பள்ளிவாசல் மற்றும் மதரசா கல்வி நிறுவன புனரமைப்புப் பணிக்கு வஃபு வாரியம் மூலம் ரூ. 10 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது

இதற்கான காசோலையை எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில், பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஏ.எச்.எம் நாஜிம் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், முகமதியா பள்ளிவாசல் தலைவர் முகம்மது யாசிம், செயலாளர் உபயதூர் ரஹிமான் மற்றும் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News