செய்திகள்
திருப்பதி

திருப்பதியில் பொங்கலையொட்டி 36 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-01-15 12:16 IST   |   Update On 2021-01-15 12:16:00 IST
திருப்பதியில் பொங்கல் பண்டிகையையொட்டி 36 ஆயிரத்து 439 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.2.5 கோடி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

திருப்பதி 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் மூலம் குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கடும் குளிரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று 36 ஆயிரத்து 439 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,920 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

ரூ.2.5 கோடி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இதே போல் திருச்சானூர், பத்மாவதி தாயார் கோவில் சீனிவாச மங்காபுரம் வெங்கடேச பெருமாள் கோவில், காளஹஸ்தி உள்ளிட்ட கோவில்களில் நேற்று அதிகளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Similar News