செய்திகள்

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்

Published On 2016-08-05 13:15 IST   |   Update On 2016-08-05 13:15:00 IST
புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படி நடைபெற்றது. அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்களும், அர்ச்சனைகளும், யாகங்களும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

முக்கி வீதிகளின் வழியாகச் சென்று கோவிலை வந்தடைந்தது. கோவில் விழாவில், தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News