செய்திகள்

மழையில்லை... ஆனால் அரைமணி நேரம் கழித்துதான் டாஸ் சுண்டுவது குறித்து முடிவு

Published On 2019-06-13 09:13 GMT   |   Update On 2019-06-13 09:50 GMT
நாட்டிங்காமில் மேக மூட்டமாக இருப்பதால் அரைமணி நேரம் கழித்துதான் டாஸ் சுண்டுவது குறித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 18-வது லீக் ஆட்டம் நாட்டிங்காமில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சரியாக 2.30 மணிக்கு சுண்டப்படும். ஆனால், நேற்று நாட்டிங்காமில் கனமழை பெய்தது. இன்றும் மழை பெய்யும் என வானிமை மையம் தெரிவித்தது.

2.30 மணிக்கு மழை பெய்யவில்லை. என்றாலும் மேக மூட்டமாக இருப்பதால் அரைமணி நேரம் கழித்துதான் போட்டி தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News