உலகம்

நாங்கள் முதலில் அணு ஆயுத சோதனை தொடங்க மாட்டோம்: டிரம்புக்கு பாகிஸ்தான் பதில்

Published On 2025-11-04 19:41 IST   |   Update On 2025-11-04 19:41:00 IST
  • அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நாடு அணு ஆயுத சோதனை நடத்தும் என சமீபத்தில் கூறினார்.
  • வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்றார்.

லாகூர்:

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நாடு அணு ஆயுத சோதனை நடத்தும் என்று சமீபத்தில் கூறினார்.

இதற்கிடையில் அதிபர் டிரம்ப் கூறுகையில், ரஷியாவும் சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன. இதுகுறித்து அவர்கள் பேசமாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. மற்றவர்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார்கள். வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் முதலில் அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை. தற்போதும் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும் நாடாக பாகிஸ்தான் இருக்காது. நாங்கள் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க மாட்டோம் என தெரிவித்தார்.

அணு ஆயுத சோதனை தொடர்பாக அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா, நாங்கள் ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடு. அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது என தெரிவித்தது.

Tags:    

Similar News