உலகம்

கிரீன்லாந்து விவகாரம்: எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்கவரி நடவடிக்கை- டிரம்ப் எச்சரிக்கை

Published On 2026-01-17 08:34 IST   |   Update On 2026-01-17 08:34:00 IST
  • அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் அவசியம்.
  • டென்மார்க் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் அரசின் ஒரு பகுதியாக உள்ள, தன்னாட்சி பெற்ற பகுதியாக செயல்பட்டு வரும் கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வாஷிங்டனில் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் அவசியம் என கூறினார். மேலும், கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆதரவு அளிக்காத எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்க வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்து அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என டென்மார்க் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News