உலகம்

உக்ரைன் ஓட்டல் மீது ஏவுகணை தாக்குதல்- 4 பேர் பலி

Published On 2023-06-28 07:45 GMT   |   Update On 2023-06-28 07:45 GMT
  • ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது
  • ஓட்டலுக்குள் ஏராளானோர் இருந்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள கிராம டோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

அப்போது ஓட்டலுக்குள் ஏராளானோர் இருந்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

Tags:    

Similar News