உலகம்

தைவான் அதிபர் தேர்தல்: ஆளும் கட்சி வேட்பாளர் லை சிங் டி அபார வெற்றி

Published On 2024-01-13 13:14 GMT   |   Update On 2024-01-13 13:14 GMT
  • தைவானில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது.
  • இதில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தைபே:

கிழக்கு ஆசியாவில் பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். சீனாவுக்கு அருகே அமைந்துள்ள இந்நாட்டை தனி நாடாக சீனா அங்கீகரிக்கவில்லை. மேலும், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனவும் சீனா கூறி வருகிறது.

இதற்கிடையே, தைவானில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. அங்கு ஆட்சியில் உள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லை சிங் டி அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து சீனா ஆதரவுபெற்ற தேசியவாத கட்சியின் ஹவ் யொ-ஹி அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். தைவான் மக்கள் கட்சியின் கோ வென் ஜி வேட்பாளராக களமிறங்கினார்.

அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் லை சிங் டி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான லை சிங் டி வெற்றி பெற்றுள்ளார் என தகவல் வெளியானது. அவர் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். விரைவில் அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.

தைவான் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சீன ராணுவம் பகிரங்க மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News