உலகம்

நடுவானில் அலறிய பயணிகள்: கடல்மீது பறந்த விமானம்.. சட்டென இறங்கி, ஏறியதால் பரபரப்பு

Published On 2024-06-16 07:45 IST   |   Update On 2024-06-16 07:45:00 IST
  • விபத்தில் சிக்காமல் நூலிழைவில் தப்பியதாக தகவல்.
  • இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹவாய் தீவில் உள்ள ஹோன்லுலுவில் இருந்து லிஹூவிற்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக அதிபயங்கர விபத்தில் சிக்காமல் நூலிழைவில் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 2786 விமானமான போயிங் 737 மேக்ஸ் 8 போதிய வெளிச்சமின்மை காரணமாக தரையிறங்குவதை தவிர்க்க உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு காரணமாக கடல் பகுதியின் மேல் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் நொடிகளில் பலநூறு அடிகள் கீழே இறங்கியது. இதனால் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அலறினர். எனினும், விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தி அதனை சட்டென மேலே உயர்த்தினர்.

இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News