உலகம்

உயர்மின் கோபுரத்தில் மோதி 100 அடி உயரத்தில் தொங்கிய விமானம்

Published On 2022-11-28 09:01 GMT   |   Update On 2022-11-28 09:01 GMT
  • மின்கோபுரத்தில் சிக்கிய விமானத்தை மீட்கும் பணி நடைபெறுகிறது.
  • 2 நபர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் உயர்அழுத்த மின் கோபுரத்தின் மீது குட்டி விமானம் மோதி விபத்துக்குள்ளானது. மேரிலேண்ட் மாநிலம் மோன்ட்கோமெரி பகுதியில் இரவு நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த விமானம் நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து மோன்ட்கோமெரி விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக விபத்தில் சிக்கி உள்ளது. இதனால் 100 அடி உயரத்தில், மின் கோபுரத்தில் விமானம் தொங்கிக்கொண்டிருந்தது. இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது. வீடுகள், தெருக்கள் அனைத்தும் இருளில் மூழ்கின.

விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலையில் விமானத்தில் இருந்த 2 நபர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மின்கோபுரத்தில் சிக்கிய விமானத்தை மீட்கும் பணி நடைபெறுகிறது. மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் சீரடைந்துள்ளது.

Tags:    

Similar News