உலகம்

பஹல்காம் தாக்குதல்- ஷாங்காய் அமைப்பு கண்டனம்

Published On 2025-09-01 15:02 IST   |   Update On 2025-09-01 15:02:00 IST
  • பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உறுப்பு நாடுகள் கடுமையாக கண்டிக்கின்றன.
  • பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டைத் தரநிலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

ஷாங்காய் அமைப்பு உச்சி மாநாட்டில், காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உறுப்பு நாடுகள் கடுமையாக கண்டிக்கின்றன. பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம்.

இதுபோன்ற தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள், மற்றும் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத குழுக்களை கூலிப்படை நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் உறுப்பு நாடுகள் கடுமையாகக் கண்டிக்கின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டைத் தரநிலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய இயக்கம் உள்பட பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட சர்வதேச சமூகத்தை அழைக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி மாநாட்டில் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் மாதம் சீனாவில் நடந்த ஷாங்காய் அமைப்பு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்தின் அறிக்கையில் பஹல்காம் தாக்குதல் பற்றி குறிப்பிடாததால் அதில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் கையெழுத்திட மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News