உலகம்
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்
- பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
- வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இந்தியா வருமாறு பிரதமர் மோடியின் அழைப்பை ரஷிய அதிபர் புதின் ஏற்றுள்ளார்.
புதின், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியாவின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக புதின் மோடியிடம் கூறியதாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
மேலும் இந்த உரையாடலின்போது இந்த வருட இறுதியில் இந்தியாவில் நடைபெற இருக்கும் வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள புதினை மோடி அழைத்துள்ளார்.
இந்த அழைப்பை புதின் ஏற்றுள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரம்ளின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.