உலகம்

மொராக்கோ: குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து கோர விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

Published On 2025-12-11 11:07 IST   |   Update On 2025-12-11 11:07:00 IST
  • அருகருகே அமைந்த அந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தன.
  • இந்த விபத்தானது மொராக்கோவில் இந்தாண்டு நடைபெற்ற 2வது பெரிய விபத்தாகும்.

மொராக்கோவின் 2வது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரண்டு நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்து நேற்று பெரும் விபத்து ஏற்பட்டது.

அருகருகே அமைந்த அந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்தர். மேலும் 16 பேர் காயங்களுடன் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

இடிபாடுகளுக்கும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியாததால் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொங்க உள்ளது.

இந்த விபத்தானது மொராக்கோவில் இந்தாண்டு நடைபெற்ற 2வது பெரிய விபத்தாகும். முன்னதாக மொராக்கோவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட மற்றொரு கட்டட விபத்தில் 10 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News