இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ ஆகிய 2 விமான நிலையங்கள் மீது இஸ்ரோ வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க தயார் நிலையில் இந்திய விமானப்படை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப் படையில் உள்ள சி-17, ஐ.எல்-76, சி-130ஜே ரக விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்டன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஹமாஸ் அமைப்பு ஐஎஸ்ஐஎஸ் போன்றது. ஐஎஸ்ஐஎஸ் போன்று ஹமாஸ் அமைப்பும் அழிக்கப்படும்" என்றார்.
சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியா குற்றச்சாட்டு.
பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் இடங்களில் தாக்குதல் நடத்துவதை தவிர்க்குமாறு இஸ்ரேலுக்கு எகிப்து வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஒரு இந்தியர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தகவல்.
காசா உடனான எகிப்தின் ரஃபா எல்லையை திறப்பதாக, எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 23 லட்சம் பேர் வசிக்கும் காசாவில் உணவு, எரிபொருளை முழுமையாக இஸ்ரேல் நிறுத்தியது. ஒரே ஒரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடக்கியுள்ளது.
இஸ்ரேலின் பதில் தாக்குதலால் காசா நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.