உலகம்

ஈரானில் தந்தை உள்பட 12 உறவினர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுத்தள்ளிய நபர்

Published On 2024-02-17 13:19 GMT   |   Update On 2024-02-17 13:19 GMT
  • ஈரானில் மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு நடக்கும் சம்பவம் அரிதானது.
  • இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு ஊழியர் ஒருவர் மூன்று பேரை சுட்டுக்கொலை செய்தார்.

ஈரானில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஏ.கே. 47 ரக துப்பாக்கி மூலம் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியதில் அவனுடைய தந்தை உள்ளிட்ட 12 உறவினர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் உள்ள மத்திய மாகாணம் கெர்மன். இங்குள்ள பர்யாப் கவுன்ட்டியில் உள்ள புறநகரின் கிராமம் ஒன்றில் குடும்ப பிரச்சனை காரணமாக, நடந்த சண்டையின் உச்சக்கட்டமாக இந்த துபாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

உறவினர்கள் மற்றும் தந்தை ஆகியோரை வெறித்தனமாக சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர் பாதுகாப்புப்படையினர் அந்த நபரை சுற்றி வளைத்து துப்பாக்கியல் சுட்டு கொலை செய்துள்ளனர்.

ஈரானில் மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்வது மிகவும் அரிதானது. அங்கே வேட்டையாடுவதற்கு மட்டும் மக்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படுகிறது.

இரண்டு வருடத்திற்கு முன்னதாக அரசு நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மூன்று முறை கொலை செய்தார். பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

Tags:    

Similar News