அடிபணிய மறுத்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.. ரூ.18 ஆயிரம் கோடி நிதியை அதிரடியாக நிறுத்திய டிரம்ப்!
- மேலும் பல மாற்றங்களை செய்ய வலியறுத்தியதையும் நிராகரித்தது.
- பல்கலைக் கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி நிறுத்தப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது.
மேலும் பல மாற்றங்களை செய்ய வலியறுத்தியதையும் நிராகரித்தது. இந்த நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரம் கோடி) நிதியை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக் கழகங்களுக்கு நிதி கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது.
யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மக்களின் வரிப் பணத்தை விரும்பினால், பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அர்த்தமுள்ள மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளது.