உலகம்
null

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வீட்டில் தீ விபத்து.. பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் விசாரணை

Published On 2025-05-13 05:53 IST   |   Update On 2025-05-13 10:57:00 IST
  • தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
  • ஸ்டார்மர் பிரதமரின் அதிகாரப்பூர்வ டவுனிங் தெரு இல்லத்தில் வசித்து வருகிறார்.

வடக்கு லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பிரதமர் சர் கீர் ஸ்டார்மரின் வீட்டில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் தீ விபத்தில் வீட்டின் ஒரு கதவு சேதமடைந்தது.

ஜூலை மாதம் பதவியேற்றதிலிருந்து, ஸ்டார்மர் பிரதமரின் அதிகாரப்பூர்வ டவுனிங் தெரு இல்லத்தில் வசித்து வருகிறார்.  விபத்து குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

Similar News