உலகம்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: நிரவ் மோடியின் மேல் முறையீட்டு மனு மீண்டும் தள்ளுபடி

Published On 2025-05-15 23:49 IST   |   Update On 2025-05-15 23:49:00 IST
  • நிரவ் மோடி 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
  • அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

லண்டன்:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், நிரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை லண்டன் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிரவ் மோடி தாக்கல் செய்த 10வது மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News