உலகம்

ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவு - 4 பேர் பரிதாப பலி

Published On 2023-04-09 16:41 GMT   |   Update On 2023-04-12 06:49 GMT
  • ஆல்ப்ஸ் மலையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
  • இதில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாரிஸ்:

பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவாசிகள் குவிந்திருந்தனர்.

அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Tags:    

Similar News