தமிழ்நாடு செய்திகள்
null

தமிழுக்குத் தீங்கு நினைக்கும் யாருடைய எண்ணமும் ஒருபோதும் நிறைவேறாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-09-07 09:34 IST   |   Update On 2025-09-07 10:03:00 IST
  • திராவிடத்தால் வாழ்கிறோம் என பெருமிதத்துடன் சொல்கின்ற தமிழர்களை இங்கு பார்க்கிறேன்.
  • சுயமரியாதை, சமத்துவ எண்ணம், சமூகநீதி கோட்பாட்டையும் விடமாட்டோம்.

லண்டன் நகரில் நடைபெற்ற தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

* உலகில் எங்கு சென்றாலும் தமிழர்களாகிய நாம் நமது மொழியையும் பண்பாட்டையும் விடமாட்டோம்.

* சுயமரியாதை, சமத்துவ எண்ணம், சமூகநீதி கோட்பாட்டையும் விடமாட்டோம்.

* திராவிடத்தால் வாழ்கிறோம் என பெருமிதத்துடன் சொல்கின்ற தமிழர்களை இங்கு பார்க்கிறேன்.

* தமிழுக்குத் தீங்கு நினைக்கும் யாருடைய எண்ணமும் ஒருபோதும் நிறைவேறாது.

* தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் சொல்கிற தூதுவர்களாக இங்கிலாந்து வாழ் தமிழர்கள் திகழ்கின்றனர்.

* சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான இளைஞர்கள், அமைதியான சூழல் காரணமாக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன.

* தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News