உலகம்

ஆப்கானிஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

Published On 2024-02-21 13:42 GMT   |   Update On 2024-02-21 13:43 GMT
  • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
  • கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

காபுல்:

ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 6.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.

10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் தெரியவில்லை.

ஏற்கனவே 4.2 மற்றும் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News