உலகம்

தென் ஆப்பிரிக்கா: பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி

Published On 2025-12-06 18:48 IST   |   Update On 2025-12-06 18:48:00 IST
  • தென் ஆப்பிரிக்காவில் மதுபான பாரில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
  • இதில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேப் டவுன்:

தென் ஆப்பிரிக்கா தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள மதுபான பாரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 2 சிறுவர்கள், ஒரு சிறுமி உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News