உலகம்

சீனாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு

Published On 2024-01-23 02:58 GMT   |   Update On 2024-01-23 02:58 GMT
  • நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.
  • சீனாவை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியிலும் நள்ளிரவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

சீனா:

சீனாவின் ஜின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் நேற்றிரவு 11.39 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியிலும் நள்ளிரவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி என்சிஆர் பகுதியில் இரவு 11.45 முதல் 12 மணிக்குள் மக்கள் கடும் அதிர்வை உணர்ந்துள்ளனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக டெல்லியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News