உலகம்
இம்ரான் கான்

லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் வீட்டு முன்பு இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம்

Published On 2022-04-11 08:03 GMT   |   Update On 2022-04-11 08:03 GMT
இம்ரான் கான் அரசு கவிழ்ந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது கட்சி ஆதரவாளர்கள் லண்டனில் உள்ள நவாஸ்ஷெரீப் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டன்:

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் சகோதரர் ‌ஷபாஸ் ஷெரீப் இன்று தேர்ந்து எடுக்கப்படுகிறார். இந்த நிலையில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது கட்சி ஆதரவாளர்கள் லண்டனில் உள்ள நவாஸ்ஷெரீப் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நவாஸ்ஷெரீப்புக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதுபற்றி அறிந்ததும் நவாஸ்ஷெரீப் ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர். இதை தொடர்ந்து இரு தரப்பு மோதலை அங்கு இருந்த போலீசார் கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News