செய்திகள்
கொலம்பியாவில் 50 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு
கொலம்பியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.27 லட்சத்தைத் தாண்டியது.
கொலம்பியா:
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கொலம்பியா தற்போது 11-வது இடத்தில் உள்ளது
இந்நிலையில், கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும், அந்நாட்டில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.27 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 48 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது -மோடி