செய்திகள்

சீன தொழிற்சாலையில் வெடிவிபத்து - 7 பேர் பலி

Published On 2019-03-31 09:01 GMT   |   Update On 2019-03-31 09:01 GMT
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் தொழிற்சாலை ஒன்றில் வாயு கசிவினால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். #factoryexplosioninChina
பீஜிங்:

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உலோக தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள உடைந்த உலோகங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பகுதியில் வாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.  மேலும் 5 பேர் காயமடைந்தனர் என்றும், வெடிவிபத்து ஏற்பட்டது பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றும் செய்திகள் வெளியாகின.

ஜியாங்சு மாகாணத்தில் கடந்த சில நாட்களில் ஏற்பட்டுள்ள 2வது மிகப்பெரிய வெடிவிபத்து இது. மார்ச் 21-ம் தேதி யான்செங் நகரில் ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 78 பேர் பலியானது நினைவிருக்கலாம். #factoryexplosioninChina
Tags:    

Similar News