செய்திகள்

தென்கொரியாவில் 1,600 பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையதளத்தில் விற்பனை

Published On 2019-03-21 18:44 GMT   |   Update On 2019-03-21 18:44 GMT
தென்கொரியாவில் 1,600 பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையதளத்தில் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #SouthKorea
சியோல்

தென்கொரியாவில் ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பகிர்வது ஆகியவை சட்டப்படி குற்றமாகும்.

இந்தநிலையில், மர்ம கும்பல் ஒன்று அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் ஓட்டலில் அறை எடுத்து தங்கிய பெண்களை ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் பிடித்து, இணையதளத்தில் விற்று, பணம் சம்பாதித்தது அம்பலமாகி உள்ளது. இதனால் சுமார் 1,600 பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஆபாச வீடியோக்களை பதிவு செய்வதை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியதாகவும், அதன் மூலம் 6,200 டாலர்கள் (சுமார் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம்) வரை சம்பாதித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டால் ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சுமார் ரூ.18 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News