செய்திகள்

அமெரிக்காவில் 4 பேர் சுட்டுக்கொலை- போலீசார் விசாரணை

Published On 2019-02-19 05:51 GMT   |   Update On 2019-02-19 05:51 GMT
அமெரிக்காவில் மிசிகன் மாகாணத்தில் பூட்டிய வீட்டுக்குள் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிகாகோ:

அமெரிக்காவில் மிசிகன் மாகாணத்தில் சோலன் டவுன்ஷிப் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அவர்களது உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட குண்டு காயங்கள் இருந்தன. எனவே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

ஆனால் அவர்களை சுட்டது யார்? எதற்காக இக்கொலை நடந்தது? என தெரியவில்லை. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News