செய்திகள்

மான்செஸ்டர் கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது - இங்கிலாந்து போலீசார்

Published On 2019-01-01 14:47 GMT   |   Update On 2019-01-01 14:47 GMT
மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
லண்டன்:

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ரெயில்வே நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் 3 பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார்.

இந்த சம்பவத்தில் ஆண், பெண் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், மற்ற நாடுகள் மீது நீங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என சந்தேகத்திற்குரிய நபர் கூறியதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே, மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
Tags:    

Similar News