செய்திகள்

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 28 பேர் பலி

Published On 2018-12-31 13:13 GMT   |   Update On 2018-12-31 13:13 GMT
ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 28 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #ISMilitantskilled
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.
 
இந்த தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் உளவுப்பிரிவின் பொறுப்பாளரான செதிக் யர் உள்பட 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #ISMilitantskilled
Tags:    

Similar News