செய்திகள்
ஆப்கானிஸ்தான் விமானப்படை தாக்குதலில் 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பர்யாப் மாகாணத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். #Afghanistanmilitants #militantskilled #airraids
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பர்யாப் மாகாணத்திற்குட்பட்ட காகா சப்ஸ் போஷ் மற்றும் காய்சார் மாவட்டங்களில் நேற்றிரவு பயங்கரவாதிகளை குறிவைத்து விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 உள்ளூர் பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 3 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Afghanistanmilitants #militantskilled #airraids