செய்திகள்

தென் ஆப்பிரிக்கா - சாலை விபத்தில் சிக்கி 27 பேர் பரிதாப பலி

Published On 2018-10-19 21:39 GMT   |   Update On 2018-10-19 21:39 GMT
தென் ஆப்பிரிக்காவில் டயர் வெடித்த லாரி நிலைகுலைந்து ஓடி முன்னால் சென்ற வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
ஜோகனஸ்பெர்க்:

தென் ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி டயர் வெடித்தது.

இதில் நிலைகுலைந்த லாரி முன்னால் சென்ற வாகனங்களின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் மினி பேருந்து, டாக்சி மற்றும் சில வாகனங்களில் சென்றவர்கள் விபத்தில் சிக்கினர்.

இந்த விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர் எனவும், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். சாலை விபத்தில் சிக்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident
Tags:    

Similar News