செய்திகள்

பாகிஸ்தானில் சோகம் - சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பரிதாப பலி

Published On 2018-10-12 09:43 GMT   |   Update On 2018-10-12 09:43 GMT
பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #Pakistan #WallCollapse
கராச்சி:

பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் உள்ளது குலாம் சர்வார் ஷம்பானி கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மண் வீட்டின் அருகில் 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் சிலர் நேற்று விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த மண் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சிக்கிக் கொண்டனர்.



தகவலறிந்து அங்கு வந்த போலீசார், சுவர் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். இந்த விபத்தில் 7 பெண் குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மேலும், 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 குழந்தைகள் பலியானது பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #WallCollapse
Tags:    

Similar News