செய்திகள்

மோடி பாணியில் தூய்மை பாகிஸ்தான் திட்டம் - இம்ரான் கான் இன்று தொடங்கி வைக்கிறார்

Published On 2018-10-08 08:19 GMT   |   Update On 2018-10-08 08:19 GMT
பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தைப் போன்று தூய்மையான பாகிஸ்தான் மற்றும் பசுமையான பாகிஸ்தான் திட்டத்தை அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று தொடங்கி வைக்கிறார். #ImranKhan #CleanlinessDrive
இஸ்லாமாபாத்:

‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் நமது நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்துக்கான பிரசார தூதவர்களாக விளையாட்டு மற்றும் கலைத்துறையை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களை அவர் இணைத்துள்ளார்.



அதேவகையில், பாகிஸ்தானிலும்  தூய்மையான பாகிஸ்தான் மற்றும் பசுமையான பாகிஸ்தான் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் பாராளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, பாகிஸ்தான் நாட்டிலுள்ள 4 மாகாணங்களை சேர்ந்த முக்கிய பெருநகரங்களில் பிரதமர் இம்ரான் கான் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என பாகிஸ்தான் வானொலி தெரிவித்துள்ளது. #Pakistancleanlinessdrive #ImranKhaninaugurate 
Tags:    

Similar News