செய்திகள்

பாகிஸ்தானில் துணிகரம் - மத தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

Published On 2018-10-04 21:09 GMT   |   Update On 2018-10-04 21:09 GMT
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மத தலைவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல்ப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #MaulanaIsmailDarwesh
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் மத தலைவராக இருந்தவர் மவுலானா இஸ்மாயில் தர்வேஷ். இவர் நேற்று தனது பாதுகாவலருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

பெஷாவர் நகரின் பண்டோ பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, அவரது காரை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வழிமறித்தது.

அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்ப்பாக்கியால் இஸ்மாயிலை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் இஸ்மாயிலும், அவரது பாதுகாவலரும் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்த இஸ்மாயிலை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மத தலைவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல்ப்பட்டது அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #MaulanaIsmailDarwesh
Tags:    

Similar News