செய்திகள்

2018ம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு - பெண் விஞ்ஞானி உள்பட 3 பேருக்கு அறிவிப்பு

Published On 2018-10-03 12:31 GMT   |   Update On 2018-10-03 12:31 GMT
2018-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி பிரான்சஸ் அர்னால்ட் உட்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. #NobelPrize #NobelPrizeForChemistry
ஸ்டாக்ஹோம்:

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

வேதியியல் துறை வல்லுநர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதகுலத்துக்கு உதவும் வகையில் பரிணாம வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில் புதிய வேதியியல் கண்டுபிடிப்புக்களுக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம்  தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.  #NobelPrize #NobelPrizeForChemistry
Tags:    

Similar News