செய்திகள்
சோமாலியாவில் கார் குண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
சோமாலியா நாட்டில் அரசு அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. #Somaliaexplosion #Mogadishuexplosion
மொகடிஷு:
சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹாவ்லே வாடாக் மாவட்டத்தில் உள்ள அம்மாவட்ட தலைமை நிர்வாக அலுவலகத்தின் மீது நேற்று வேகமாக வந்த ஒரு கார் மோதி வெடித்துச் சிதறியது.
இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 6 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர் என முதல் கட்டமாக தகவல் வெளியானது.
கார் குண்டு வெடித்து சிதறிய வேகத்தில் அருகாமையில் இருந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனது. ஒரு மசூதியின் மேற்கூரை மற்றும் சில வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.
இந்நிலையில், கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். #Somaliaexplosion #Mogadishuexplosion