செய்திகள்

சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அஷ்ரப் கனி

Published On 2018-07-05 20:46 IST   |   Update On 2018-07-05 20:46:00 IST
ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி உறுதியளித்துள்ளார். #AfganSikhAttack
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் சமீபத்தில் ஐ.எஸ் அமைப்பினர் ஜலாலாபாத் பகுதியில் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் அதிபரை சந்திக்க சீக்கியர்கள் குழு சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, குருத்வாராவுக்கு சென்று இறந்த சீக்கியர்களுக்காக அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #AfganSikhAttack
Tags:    

Similar News