செய்திகள்

ஈராக்கின் பாக்தாத் நகரில் குண்டுவெடிப்பு - ஒருவர் பலி

Published On 2018-06-07 10:34 IST   |   Update On 2018-06-07 10:34:00 IST
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #Baghdadblast
பாக்தாத்:

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தின் சதர் நகரில் நேற்று மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இந்த வெடி குண்டு தாக்குதல் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே சதர் நகரில் உள்ள வெடி மருந்து கிடங்கு இன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Baghdadblast
Tags:    

Similar News