செய்திகள்

ஈராக்கின் பாக்தாத் நகரில் வெடி மருந்து கிடங்கு வெடித்து 7 பேர் பலி

Published On 2018-06-06 22:02 GMT   |   Update On 2018-06-06 22:02 GMT
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்தாத்:

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பாக்தாத்தில் அமைந்துள்ள சத் நகரில் வெடி மருந்து கிடங்கு உள்ளது. இங்கு கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், நேற்று இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயம் அடைந்தனர். வெடி விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News