செய்திகள்

ஏமன் படகு விபத்தில் 46 பேர் மூழ்கி பலி?

Published On 2018-06-07 01:37 IST   |   Update On 2018-06-07 01:37:00 IST
ஏமன் கடல் பகுதியில் அகதிகளை அழைத்து வந்த படகு கவிழ்ந்ததில் 46 பேர் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Yemen #MigrantsDrown
ஜெனிவா:

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அதற்கு அம்மக்கள் ஏமன் நாட்டினை நுழைவாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எத்தியோப்பியாவை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக ஒரு படகில் ஏமனுக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த படகில் 100க்கு மேற்பட்ட அகதிகள் இருந்தனர். இதில் 83 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவர்.

இந்த படகு ஏமன் அருகே வந்தபோது கடல் கொந்தளிப்பு காரணமாக கடலில் மூழ்கியதில் 46 பேர் மூழ்கினர். தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் மாயமான 16 அகதிகளை தேடி வருகின்றனர். #Yemen #MigrantsDrown 
Tags:    

Similar News