செய்திகள்

பாகிஸ்தானில் 6 உறுப்பினர் மந்திரிசபை பதவி ஏற்பு

Published On 2018-06-05 19:15 GMT   |   Update On 2018-06-05 19:15 GMT
இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில் 6 உறுப்பினர்களை கொண்ட புதிய மந்திரிசபை பதவி ஏற்றது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் வரும் ஜூலை மாதம் 25-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இடைக்கால பிரதமராக முன்னாள் நீதிபதி நசிருல் முல்க் நியமிக்கப்பட்டார். இவர் 1-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில் 6 உறுப்பினர்களை கொண்ட புதிய மந்திரிசபை பதவி ஏற்றது. புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மந்திரிசபையில் இடம் பிடித்தவர்கள், பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் முன்னாள் கவர்னர் சாம்ஷெத் அக்தர், ரோஷன் குர்ஷித், பாரிஸ்டர் அலி ஜப்பார், முன்னாள் ஐ.நா. தூதர் அப்துல்லா உசேன் ஆரூண், அசம்கான், முகமது யூசுப் ஷேக் ஆவார்கள்.

இவர்கள் அனைவரும் நாட்டு நிர்வாகத்தில் இடைக்கால பிரதமர் நசிருல் முல்குக்கு பக்க பலமாக இருப்பார்கள்.
பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நசிருல் முல்க் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மந்திரிகளுக்கான இலாகா விவரம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. 
Tags:    

Similar News