செய்திகள்

பெல்ஜியம் நாட்டில் மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் இரு போலீசார் பலி

Published On 2018-05-29 11:23 GMT   |   Update On 2018-05-29 11:23 GMT
பெல்ஜியம் நாட்டின் லீய்ஜ் நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு போலீசார் உயிரிழந்தனர். எதிர் தாக்குதலில் கொலையாளியும் உயிரிழந்தான்.
புருசெல்ஸ்:

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசெல்ஸ் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் லீய்ஜ் என்னும் அழகிய நகரம் அமைந்துள்ளது.

பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் இந்நகரின் மையப்பகுதியில் உள்ள பள்ளி அருகே (உள்நாட்டு நேரப்படி) இன்று காலை 10.30 மணியளவில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் அவ்வழியாக சென்ற இரு போலீசாரை சுட்டுக் கொன்றான்.


உடன்வந்த போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் அந்த கொலையாளியும் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீசாரை கொன்ற மர்ம நபர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். #Belgiumshooting 
Tags:    

Similar News