செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-05-25 16:54 IST   |   Update On 2018-05-25 16:54:00 IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Thoothukudipolicefiring #Lankaprotest
கொழும்பு:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றவர்கள் மீது தூத்துக்குடி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், 13 உயிர்களை பறித்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு தமிழக அரசு மற்றும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரான முழக்கங்களுடன் ஏராளமான ஆண்களும், பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், இந்த சம்பவத்துக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் இலங்கை தொழிலாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பை சேந்தவர்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தலைமை தூதருக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

17 வயது இளம்பெண் உள்பட 13 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்கு தங்களது எதிர்ப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் பதிவு செய்யுமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Thoothukudipolicefiring #Lankaprotest 
Tags:    

Similar News