செய்திகள்

கனடாவில் உள்ள இந்திய ஓட்டலில் குண்டுவெடிப்பு - 15 பேர் காயம்

Published On 2018-05-25 06:52 GMT   |   Update On 2018-05-25 06:52 GMT
கனடாவின் டோரண்டோ மாகாணத்தில் உள்ள இந்திய ஓட்டலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #CanadaBlast
டோரண்டோ:

கனடாவின் டோடண்டோ மாகணத்தின் உள்ள மிசிஸாயுகா பகுதியில் பாம்பே பேல் என்ற இந்திய ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்நிலையில், இச்சம்வம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு மர்ம நபர்கள் ஓட்டலுக்குள் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #CanadaBlast

Tags:    

Similar News