செய்திகள்

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் கொலை - தற்கொலைப்படை தாக்குதல் முறியடிப்பு

Published On 2018-05-17 20:50 GMT   |   Update On 2018-05-17 20:50 GMT
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட குவெட்டா நகரில் உள்ள துணை ராணுவ படையினரின் அலுவலகம் மீது சில பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர். இதற்காக ஒரு காரில் அந்த அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்துள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் அந்த வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த வாகனத்தை நிறுத்தாமல் உள்ள நுழைய முயன்றுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அந்த காரில் பயணம் செய்த ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அந்த காரில் வெடிகுண்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கொல்லப்பட்ட ஐந்து பேரும் தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அங்கு நடைபெற இருந்த பெரிய பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News