செய்திகள்

2 குழந்தைகளை வெட்டி கொன்ற பெண்ணிற்கு சாகும் வரை ஜெயில் தண்டனை

Published On 2018-05-15 10:52 GMT   |   Update On 2018-05-15 10:52 GMT
நியூயார்க்கில் 2 குழந்தைகளை வெட்டி கொன்ற பெண்ணிற்கு சாகும் வரை ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #YoselynOrtega
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கெவின் கிரீம் , மரினா கிரீம் தம்பதியின் இரண்டு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொடரப்பட்டது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரீமின் 6 வயது மகள் மற்றும் அவளின் இரண்டு வயது தம்பி இருவரும் யோசிலின் ஆர்டிகா என்ற 55 பெண் பராமரிப்பின் கீழ் இருந்தனர்.

சம்பவம் நடந்த அன்று மரினா கிரீம் தனது வீட்டை திறந்து பார்த்த போது வீட்டு குளியலறையில் இரண்டு குழந்தைகளும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இதை கண்ட அவர் அதிர்ர்சியில் உறைந்தார்.



இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் ஆர்டிகாவை கைது செய்தனர். 6 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் ஆர்டிகாவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற  ஆர்டிகாவுக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இது கிரீம் குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  #YoselynOrtega
Tags:    

Similar News